1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்!

தமிழகத்தில் நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்!


வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு நாளை முதல் -பாஸ் கட்டாயம் என்பதால், வாகனங்களை தீவிரமாக சோதனை நடத்த காவல்துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. முழு பொதுமுடக்கம் என்றாலும் கூட நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கின்றன. அதன்படி அனைத்து தியேட்டர்களிலும் ஏப்ரல் 10 முதல் 50% இருக்கைகள் மட்டும் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் ஷாப்பிங் மால்கள், பெரிய கடைகளில் 50% மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இ-பாஸ் கட்டாயம்!

உணவகங்கள், தேநீர் விடுதிகளில் 50% இரவு 11 மணி வரை உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் உட்கார்ந்து செல்ல அனுமதி, டாக்ஸியில் ஓட்டுநர் சேர்க்காமல் 3 பேர், ஆட்டோவில் ஓட்டுநர் சேர்க்காமல் 2 பேர் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை அமலுக்கு வருவதால் வாகன சோதனையை போலீஸார் தீவிரப்படுத்த உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார்கள். அண்டை மாநிலங்களான புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கட்டாயம் -பாஸ் வாங்க வேண்டும்.

அலுவலகப் பணி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களை கூறினாலும் -பாஸ் இல்லாதவர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. -பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புமாறும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like