1. Home
  2. தமிழ்நாடு

10,12-ம் வகுப்பு போதும்... தேர்வு கிடையாது. ரேஷன் கடைகளில் 2,000 காலிப்பணியிடங்கள்..!

1

ரேஷன் கடை பணியின் விவரங்கள் :
  • கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைக்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
  • தமிழ்நாடு முழுவதும் 2,000 காலிப்பணியிடங்கள் உள்ள்ன. அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்று காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுப்படும். இதில் சென்னையில் மட்டும் 348 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
  • 01.07.2024 தேதியின் படி, விண்ணப்பதார்கள் 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பொறுத்தவரை ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தபப்ட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
  • இதர வகுப்பினர் (ஒசி) - 32 வயது, அனைத்து இனைத்தைச் சாரந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை, இதர வகுப்பினைச் (ஒசி) சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் - 50 வயது மற்றும் இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் - 42 வயது வரை இருக்கலாம்.
  • விண்ணப்பதாரக்ள் பிற மாநிலத்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் எந்தப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பினும் இதர வகுப்பினராகவே கருதப்படுவர்.
கல்வித்தகுதி :
  • ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கட்டுநர் பதவிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதார்களுக்கு தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம் :
  • நியாயவிலை கடை விற்பனையாளர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.6,250 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும்.
  • நியாயவிலை கடை கட்டுநர் பதவிக்கு தொகுப்பு ஊதியம் ரூ.5,500 மாதம் வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் ரூ.26,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
  • விண்ணப்பதார்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும்.
  • நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இட ஒதுக்கீடு மற்றும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நேரடி நியமனம் செய்யப்படுவர்.
  • கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் கோரும் இடத்தில் பணி நியமனம் வழங்கப்படும். குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு முறையில் பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :
இப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையத்தளம் மூலம் ஆன்லைன் வழியாக சரியாக தகவல்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு த் தெரிவு மற்றும் சங்கத்திற்கு ஒதுக்கீடு ஆணை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் வழங்கப்படும். உதாரணத்திற்கு சென்னை மாவட்ட் ஆள்சேர்ப்பு நிலையம் (District Recruitment Bureau) https://drbchn.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கவும். அந்தந்த மாவட்டத்திற்கு drb தொடர்ந்து மாவட்ட பெயர் சேர்ந்து இணையத்தள தேடவும்.

விண்ணப்பக் கட்டணம் :
விற்பனையாளர் (Salesman) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.150 மற்றும் கட்டுநர் (Packer) பதவிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

Trending News

Latest News

You May Like