1. Home
  2. விளையாட்டு

இங்கிலாந்து அணியின் புது வியூகம்! முழு பலத்துடன் மோத தயாராகிறது!

இங்கிலாந்து அணியின் புது வியூகம்! முழு பலத்துடன் மோத தயாராகிறது!

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக அணியின் முக்கிய மீண்டும் வரவழைத்துள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியைத் தோற்கடித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. முன்னதாக முதல் இன்னிங்ஸில் 27 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸில் எதிர்பார்த்த அளவு சோபிக்காமல் 120 ரன்களுக்குள் சுருண்டது.

டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும், ஊடகங்களும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த தோல்விக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் எடுத்த படுமோசமாக முடிவு தான் காரணம் என்று அந்நாட்டு பத்திரிக்கைகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்க புது வியூகம் அமைத்து களமிறங்குகிறது இங்கிலாந்து அணி. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் அந்நாட்டு கிரிக்கெட் விமர்சகர்களிடம் இருந்து கேப்டன் ஜோ ரூட் தப்பிப்பார். கடந்த போட்டியில் இங்கிலாந்தின் பவுலிங் ஈடு கொடுத்தாலும், பேட்டிங்கில் அவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். பேட்டிங்கில் கேப்டன் ஜோ ரூட் தவிர யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில் கடந்த போட்டியில் சொதப்பிய டாம் சிப்லே, ஜேக் க்ராவ்லே ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அணியில், நட்சத்திர வீரரான டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like