ஒரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக இதே நாளில் அவசர நிலை பிரகடனம் : அமித்ஷா ட்வீட்!
45 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது என்று மத்திய அமைச்சர் அமித்ஷா டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒரு குடும்பத்தின் பதவி ஆசைக்காக அவசர நிலை வந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே இரவில் நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டதாக அமித்ஷா டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பத்திரிகைகள், நீதிமன்றங்கள், சுதந்திரமான பேச்சு அனைத்தும் மிதிக்கப்பட்டன. ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் மீது அட்டூழியங்கள் அரங்கேறியது என்று அமித்ஷா பதிவிட்டுள்ளார். 1975 ம் ஆண்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் 45 வது ஆண்டையொட்டி அவர் பதிவிட்டுள்ளார்.
On this day, 45 years ago one family’s greed for power led to the imposition of the Emergency. Overnight the nation was turned into a prison. The press, courts, free speech...all were trampled over. Atrocities were committed on the poor and downtrodden.
— Amit Shah (@AmitShah) June 25, 2020