டிரோன் கேமரா வந்தா !! இளைஞர்கள் செய்த காரியத்தை பாருங்க !! கடுப்பான போலிஸ்..
வைரஸ் தாக்கத்தை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. தமிழகத்தில் அரசு அறிவித்த அறிவுரைகளை இளைஞர்கள் பின்பற்றாமல் வீணாக சுற்றி வருவதும், பொதுவெளியில் கூட்டமாக விளையாடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதனை தடுக்க நாகை மாவட்டம் சீர்காழியில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது சீர்காழி எடமணல் திருமுல்லைவாசல் ஆகிய இடங்களில் கூட்டமாக கிரிக்கெட் கபடி மற்றும் சீட்டுக்கட்டு விளையாடிய இளைஞர்கள் மற்றும் மீனவர்கள் ட்ரோன் கேமரா சத்தத்தைக் கேட்டு தலைதெறிக்க ஓடி ஒளிந்தனர்.
மேலும் கூட்டத்தில் ஒரு இளைஞர் டிரோன் மீது கல்லைத் தூக்கி எறிந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. இதுபோன்ற செயல் தொடர்ந்தால் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர்களை போலீசார் எச்சரித்தனர். ட்ரோன் கேமராவையே இளைஞர்கள் கல் எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Newstm.in