1. Home
  2. தமிழ்நாடு

டி.ஆர்.தொடர்ந்த புதிய வழக்கு – மாநாடு தயாரிப்பாளர் ஷாக்!!

டி.ஆர்.தொடர்ந்த புதிய வழக்கு – மாநாடு தயாரிப்பாளர் ஷாக்!!


மாநாடு படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு விற்றதை எதிர்த்து சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில் படம் திட்டமிட்டபடி வெளியாகாது என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்திருந்த நிலையில், கொட்டும் மழையில் இரவுபகல் பாராமல் தானும், மனைவியும் படத்தை வெளியிட பெருமுயற்சி எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பைனான்சியர் உத்தம்சந்திடம் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சார்பாக 5 கோடி ரூபாயை தானும், தன் மனைவியும் உத்தரவாதம் செலுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

டி.ஆர்.தொடர்ந்த புதிய வழக்கு – மாநாடு தயாரிப்பாளர் ஷாக்!!

இந்நிலையில் தங்களிடம் தெரிவிக்காமலேயே படத்தில் சாட்டிலைட் உரிமை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்கும்வரை சாட்டிலைட் உரிமைக்கு தடைவிதிக்க கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு குறித்து பைனான்சியர் உத்தம்சந்த், தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

டி.ஆர்.தொடர்ந்த புதிய வழக்கு – மாநாடு தயாரிப்பாளர் ஷாக்!!

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, வெற்றிக் கிரீடத்தை மக்களும், உழைப்பும் இணைந்து தலையில் சூடியிருக்கிறது... கொண்டாடி மகிழ்வதை விட்டுவிட்டு வழக்கா? நல்லதே வெல்லட்டும். நன்றி இறைவா.... என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like