1. Home
  2. தமிழ்நாடு

வெளியே வாக்கிங் போகாதிங்க !! போனால் இதான் நடக்கும்...

வெளியே வாக்கிங் போகாதிங்க !! போனால் இதான் நடக்கும்...


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல கூடாது என்று கடுமையான ஊரடங்கை அரசு அறிவித்தது. உடலை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க , பொதுவாக அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

வெளியே வாக்கிங் போகாதிங்க !! போனால் இதான் நடக்கும்...

குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் பெரும்பாலோர் காலை எழுந்ததும் நடைபயிற்சி சென்று வருகின்றனர். தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் வாக்கிங் போகின்றனர்.

தற்போது பொதுமுடக்கம் காரணமாக 3 மாதங்களுக்கு மேலாக மாநகராட்சி பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக தாங்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் வலம்வர ஆரம்பித்தனர்.

ஆனால் இப்படி வாக்கிங் போகும் நபர்ளுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்து வருகிறது சென்னை மாநகராட்சி. பொது முடக்கம் உள்ள சமயத்தில் கட்டுப்பாட்டை மீறி வெளியே வருவதால் இந்த நடவடிக்கை என்று மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like