தி.மு.க எம்.எல்.ஏ , இதயவர்மன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் !!
திமுகவின் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசனுக்கு இடையே நிலப்பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக எழுந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக எம்எல்ஏ இதயவர்மன் தன்னிடம் இருந்த கள்ளத் துப்பாக்கியின் மூலம் சுட்டுள்ளார்.
இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, போலீஸ் காவலில் இருக்கும் திமுக எம்எல்ஏ இதயவர்மன் ஜாமீன் கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்க வந்தது. அப்போது, போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக , அந்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Newstm.in