கடல் உள்வாங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இன்று கடல் உள்வாங்கியது.
Jul 3, 2019, 17:27 IST
| தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் இன்று கடல் அமைதியாகவும், உள்வாங்கியும் காணப்படுகிறது.
கன்னியாகுமரியில் நேற்றைய தினம் கடல் உள்வாங்கிய நிலையில், இன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் உள்வாங்கியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கடல் உள்வாங்கியுள்ளதால் மீனவ மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
newstm.in
newstm.in