Logo

முதல் மரியாதை கிடைக்காத ஆத்திரத்தில் விவசாயி வெட்டி படுகொலை

மதுரை அருகே கோவில் திருவிழாவில் முதல் மரியாதை அளிக்காத விரக்தியில் விவசாயி காஞ்சிவனம் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

முதல் மரியாதை கிடைக்காத ஆத்திரத்தில் விவசாயி வெட்டி படுகொலை

மதுரை அருகே கோவில் திருவிழாவில் முதல் மரியாதை அளிக்காத விரக்தியில் விவசாயி  ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை அருகே உள்ள இளமனூர் பகுதியில், கோவில் திருவிழாவின்போது இரு  தரப்பினருக்கு இடையே முதல் மரியாதை பெறுவதில்  மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த  ஒரு தரப்பினர், இளமனூர் பகுதியைச் சேர்ந்த காஞ்சிவனம் என்பவரை ஓட ஓட விரட்டி  அரிவாளால் சராமரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய தேவேந்திரன் உட்பட நான்கு பேரை  தேடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP