பணம் பட்டுவாடா செய்தபோது பிடிபட்ட அதிமுக பிரமுகர்!
திருத்தணியில் அதிமுக கிளை செயலாளர் சக்கரபாணி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கினார்.
Apr 17, 2019, 17:40 IST
| திருத்தணியில் அதிமுக கிளை செயலாளர் சக்கரபாணி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கினார்.
திருத்தணி தெக்களூர் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதிமுக கிளை செயலாளர் சக்கரபாணி வாக்காளர்களுக்கு பணம் அளித்ததாக தெரிகிறது.
இதையடுத்து, சக்கரபாணியிடம் இருந்த 7 ஆயிரத்து 850 ரூபாயை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், சக்கரபாணியை திருத்தணி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
newstm.in
newstm.in