கும்பகோணம்: சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது!
கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது தனியார் விடுதி ஒன்றில் ரூபாய் 3 லட்சம் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Aug 2, 2019, 17:10 IST
| கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து தகவலின் பேரில் அங்குள்ள தனியார் விடுதிகளில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனியார் விடுதி ஒன்றில் ரூபாய் 3 லட்சம் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள காவல் துறையினர் 7 பேரிடம் இருந்த 3 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in