இலங்கையில் இருந்து கடத்தி வந்த 312 கிராம் தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புடைய 312 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Nov 25, 2019, 15:25 IST
| இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.13 லட்சம் மதிப்புடைய 312 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்புவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப்பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, சையத் முகமது என்ற பயணி 312 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக சையத் முகமதிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in