1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம் !! திரும்பவும் அதிகமாகுதோ?

தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம் !! திரும்பவும் அதிகமாகுதோ?


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வரும் வேளையில் , தமிழகத்திலிம் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று வரை 1520 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,596 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஒருவர் பலியானதால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தென்காசியில் 5 பேரும், விழுப்புரத்தில் 4 பேரும், செங்கல்பட்டு, தஞ்சையில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது.

சென்னையில் 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 134 பேரும், திருப்பூரில் 109 பேரும், திண்டுக்கல்லில் 76 பேரும், ஈரோட்டில் 70 பேரும், நெல்லையில் 62 பேரும், செங்கல்பட்டில் 56 பேரும், நாமக்கல் 51 பேரும், திருச்சியில் 50 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like