சாத்தான் குளம் வியாபாரிகள் மரணம் !! காவலர்கள் 3 பேருக்கு , ஜூலை 16 ம் தேதி வரை நீதிமன்ற காவல் !! நீதிபதி உத்தரவு
சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை - மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுகனேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது.
இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து சிபிசிஐடி காவலர் கஸ்டடியில் இருந்த காவல் ஆய்வாளரின் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் உட்பட 3 பேரிடம் காலை 6 மணி முதல் கிட்டத்தட்ட 13 மணி நேரம் தற்போது வரை நடைபெற்றது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உடல் ரீதியான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து தற்போது கைது செய்யப்பட்ட காவலர்கள் நீதிபதி ஹேமா முன்னிலையில் அஜர் படுத்தப்பட்டனர். இதில் நீதிபதி காவல் 3 பேருக்கும் ஜூலை 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Newstm.in