நாட்டு மக்கள் பிச்சைக்காரர்கள் என கூறிய தயாநிதிமாறன் !! டிவிட்டரில் ஹச்.ராஜா கண்டனம்
திமுக எம்.பி தயாநிதி மாறன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது ; கொரோனா நேரத்தில் அமெரிக்க அரசும், ஏழை நாட்டின் அரசும் பொதுமக்களுக்கு தேவையான பொருளுதவி, பண உதவிகளை தருகிறது.
ஆனால் நம் ஊரில் தான் பிரதமரும், முதலமைச்சரும் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கின்றனர். மக்களே ஏற்கனவே பிச்சை எடுத்து வரும் நிலையில், பிச்சை எடுத்து வரும் மக்களிடம் பிச்சை எடுக்கும் ஒரே அரசு இந்திய அரசு மட்டுமே என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
மத்தியஅரசு 80 கோடி மக்களுக்கு 1.70 லட்சம் கோடி நேரடியாகவும் 15,000 கோடி சிகிச்சைக்காகவும் 12,000 கோடி மாநிலங்களுக்கும் தந்துள்ள சூழ்நிலையில் பாரத நாட்டு மக்களை பிச்சைக்காரர்கள் என்றும் மக்களை காத்த பிரதமரை பிச்சை வாங்குவதாக கூறியதற்கு தயாநிதிமாறன் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். pic.twitter.com/Xt4knV6JVF
— H Raja (@HRajaBJP) April 19, 2020