மரத்தடியில் கட்டிங், ஷேவிங்! அந்தநாள் ஞாபகம்!!
கொரோனா ஊரடங்கு காரணமாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மரத்தடியில் சலூன் கடை நடந்தப்பட்டுவருகிறது.
144 தடை உத்தரவு காரணமாக சலூன்கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் முடி திருத்தும் தொழிலாளர்களை தங்கள் பகுதிக்கு அழைத்து வருகின்றனர். வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் மாந்தோப்பில் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்தம் செய்கின்றனர். முடி திருத்தம் செய்பவர் முகக்கவசம் அணிந்து வேலை செய்கின்றார். ஒருவர் அமர்ந்து முடி திருத்தம் செய்து முடித்ததும், நாற்காலி கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. முடி திருத்தம் செய்ய வரும் நபர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காத்திருக்கின்றனர்.
newstm.in