1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் ஊரடங்கு.. எவையெவை இயங்கும் என கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு !

மதுரையில் ஊரடங்கு.. எவையெவை இயங்கும் என கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழக அரசு !


தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. 

இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் வரும் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் எவையெல்லாம் இயங்கும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

  • மத்திய மாநில அரசு சார்ந்த அலுவலக பணிகள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்க அனுமதி இல்லை 
  • பொதுமக்கள் 1 கி.மீ. தூரத்திற்குள் உள்ள கடைகளில் மட்டுமே அத்தியாவசிய தேவைக்குரிய பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
  • தேநீர் கடைகளுக்கு அனுமதி இல்லை. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எந்தவித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பொதுவிநியோகம், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை, பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இந்நிலையில் பிற மாவட்டங்களிலும் ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள்

newstm.in 

Trending News

Latest News

You May Like