ஜூன் மாதம் வரை ஊரடங்கு நீடிப்பு !!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 206 நாடுகளுக்கு மேல் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஆனால் இனிமேல் தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி 1,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 9,125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிலையை கட்டுக்குள் கொண்டுவர மே 4 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தற்போது ஜூன் 1 வரை நீட்டிக்கப்படுவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ அறிவித்துள்ளார்.
Newstm.in