1. Home
  2. தமிழ்நாடு

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பலன் இல்லை.. 40ஆவது நாளாக குறையாத பெட்ரோல், டீசல் விலை..!!

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பலன் இல்லை.. 40ஆவது நாளாக குறையாத பெட்ரோல், டீசல் விலை..!!


 சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும், இந்தியாவில் கடந்த 40 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலை எந்த வித மாற்றமும் இன்றி நீடிக்கிறது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றம் செய்கின்றன.

ஆனால், இந்தியாவில் கொரோனா பரவலை தொடர்ந்து  பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்படி கடந்த 40 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல்  விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பெட்ரோல் சென்னையில் ரூ.72.28, டெல்லியில் ரூ.69.59, மும்பையில் ரூ.76.31, பெங்களூருவில் ரூ.73.55 எனவும், டீசல் சென்னையில் ரூ.65.71, டெல்லியில் ரூ.62.29,  மும்பையில் ரூ.66.21, பெங்களூருவில் ரூ.65.96 என விற்கப்படுகிறது. மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாட் வரி ஏற்றத்தால்  விலை உயர்ந்தது. கடைசியாக மார்ச் 16ஆம் தேதி தான் குறைக்கப்பட்டது.

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பலன் இல்லை.. 40ஆவது நாளாக குறையாத பெட்ரோல், டீசல் விலை..!!

பிரன்ட் கச்சா எண்ணெய் அடிப்படையில்தான் இந்தியாவில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விலை கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை சுமார் 60 சதவீதம்  சரிந்துள்ளது. ஆனால், கடந்த ஜனவரி மாதம் 11ஆம் தேதி உச்ச விலையை எட்டிய பிறகு, பெட்ரோல் 10 சதவீதம், டீசல் 8.5 சதவீதம் மட்டுமே  குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் தவறாமல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், விலை குறையும்போது அதன்  பலனை பெரும்பாலும் அளிப்பதில்லை என்ற புகார் பரவலாக உள்ளது. 

கச்சா எண்ணெய் விலை சரிந்தும் பலன் இல்லை.. 40ஆவது நாளாக குறையாத பெட்ரோல், டீசல் விலை..!!

அதோடு, மத்திய அரசும் விலை குறைந்தபோது கூட கலால் வரியை உயர்த்தியது பெரும் சர்ச்சையையும்  விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.

newstm.in 

Trending News

Latest News

You May Like