அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று !! தனியார் மருத்துவமனையில் அனுமதி..
தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,378 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக உள்ள செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சரின் மனைவி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனைவி ஜெயந்திக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. எனினும், அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in