தமிழகத்தில் 1,22,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 3,756 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து இதுவரையிலான எண்ணிக்கை 1.22 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஒரே நாளில் 34,962 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13,87,322 பேருக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 74,842 பேர் ஆண்கள், 47,486 பேர் பெண்கள், 22 பேர் மூன்றாம் பாலினத்தவர். 46,480 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 64 பேர் உயிழந்துள்ளனர். அவர்களில் 21 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 43 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
newstm.in