1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு !!

சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா பாதிப்பு !!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் பிரபல ஊடகம் ஒன்றின் செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருக்கிறது.

பரிசோதனைகள் அடிப்படையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷனுக்கும், அந்த பகுதிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாரும் உள்ளே செல்லவோ , அங்கிருந்து வெளியே வரவோ தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ராயபுரத்தில் உள்ள தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் செய்தியாளர்கள் பணி அவசியம் தான் , ஆனால் தங்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டு , பாதுகாப்பாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like