கொரோனாவுக்கு பலியான 4 மாத குழந்தை... உடன் இருக்க முடியாததால் துடிதுடித்த பெற்றோர்!
கேரள மாநிலம் கோழிக்கோடில் கொரோனா பாதிப்பு காரணமாக நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நேரத்தில் கூட உடன் இருக்க முடியாததால் பெற்றோர் தவித்து போனார்கள்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த அக்குழந்தைக்கு கடந்த மூன்று மாதங்களாக இதய நோய் மற்றும் நிமோனியா இருந்தது. இதய சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துவரப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது. குழந்தையை கோழிக்கோட்டில் உள்ள கண்ணம்பரம் மசூதியில் சுகாதாரப் பணியாளர்கள் அடக்கம் செய்தனர். கொரோனா நோய்த்தொற்று குறித்த காரணம் அறிய பெற்றோரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு பயண வரலாறு இல்லை. இச்சம்பவம் கேரளாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in