#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1520ஆக உயர்வு!
தமிழகத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ளது. 457 பேர் குணமடைந்துள்ள நிலையில், நோய் தொற்று காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் 6109 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுவரையில் மொத்தமாக 46,985 மாதிரிகள் பரிசோதனை, 41,710 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போதைய நிலவரப்பட்டி உயிரிழப்பு, டிஸ்சார்ஜ் எண்ணிக்கை போக 1043 பேர் மாநிலம் முழுவதும் மருத்துவமனைரகளில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
newstm.in