#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1596ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் ஒரே நாளில் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1596ஆக அதிகரித்துள்ளது.
635 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். 943 பேர் மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் 53,045 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை பாதிப்பு 358ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
newstm.in