தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 56,845 ஆக உயர்வு.. மாவட்டம் வாரியாக முழு விவரம் வெளியீடு !
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்தள்ளது.
இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 31,361 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 38 பேர் உயிரிழந்தனர்.
இதில் 14 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள். இதுவரை 704 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 39,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மாவட்ட அளவிலான கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 414
- செங்கல்பட்டு 3,620
- சென்னை 39,641
- கோயம்புத்தூர் 255
- கடலூர் 663
- தருமபுரி 30
- திண்டுக்கல் 278
- ஈரோடு 78
- கள்ளக்குறிச்சி 366
- காஞ்சிபுரம் 1,095
- கன்னியாகுமரி 162
- கரூர் 110
- கிருஷ்ணகிரி 63
- மதுரை 636
- நாகப்பட்டினம் 195
- நாமக்கல் 92
- நீலகிரி 30
- பெரம்பலூர் 150
- புதுக்கோட்டை 69
- ராமநாதபுரம் 269
- ராணிப்பேட்டை 468
- சேலம் 323
- சிவகங்கை 95
- தென்காசி 218
- தஞ்சாவூர் 223
- தேனி 193
- திருப்பத்தூர் 66
- திருவள்ளூர் 2,414
- திருவண்ணாமலை 983
- திருவாரூர் 188
- தூத்துக்குடி 575
- திருநெல்வேலி 612
- திருப்பூர் 119
- திருச்சி 230
- வேலூர் 389
- விழுப்புரம் 551
- விருதுநகர் 190
- விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 257
- விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்) 135
- ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 400
- இதனால் மொத்த எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது
newstm.in