1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்வு !! மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக உயர்வு !!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 38,716 ஆக உயர்வு !! மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக உயர்வு !!


இன்று ஒரு நாளில் 1875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38,716 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1372 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,705 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று சென்னையில் 1, 407 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,398 ஆக உள்ளது.

இன்று 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 349 ஆக உயர்வு. இன்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகள் 16,829 , இதுவரை செய்யப்பட்ட மொத்த பரிசோதனைகள் 6,55,675 ஆகும்.

வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 12 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் குணமானவர்களின் விகிதம் 53.50 ஆகவும் , இறப்பு விகிதம் 0.90 ஆகவும் உள்ளது.

Newstm.in

Trending News

Latest News

You May Like