#BREAKING தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1372ஆக உயர்வு!
தமிழகத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1372ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்றில் இருந்து 365 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 82 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட 15 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். 35,036 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 235ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் ஒரே நாளில் 28 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
newstm.in