தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,11,000 - யை கடந்தது !! மொத்த பலி எண்ணிக்கை 1500 - யை கடந்துள்ளது...
தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 1,07,001லிருந்து 1,11,151ஆக அதிகரிப்பு.சென்னையில் இன்று 1,731பேர் கொரோனாவால் பாதிப்பு.சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 66,519ல் இருந்து 68,254ஆக உயர்ந்தது.
தமிழகத்தில் இன்று கொரோனாவால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,510ஆக அதிகரிப்பு. இன்று ஒரே நாளில் 2,186 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778ஆக அதிகரிப்பு. இன்று செங்கல்பட்டில் 274 , திருவள்ளூர் 209 , காஞ்சிபுரம் 152 , மதுரை 308 , கடலூர் 39 , திண்டுக்கல் 74 , ஈரோடு 26 , சேலம் 50 ,
ராமநாதபுரம் 93 , ராணிப்பேட்டை 67 , சிவகங்கை 88 , தென்காசி 40 , தஞ்சை 16 , தேனி 24 , திருவண்ணாமலை 141 , தூத்துக்குடி 41 , நெல்லை 48 , திருச்சி 86 , வேலூர் 179 , விழுப்புரம் 109 , விருதுநகர் 113 , புதுக்கோட்டை 56 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Newstm.in