#BREAKING தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 1700ஆக உயர்வு!
தமிழகத்தில் ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததை அடுத்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1700ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாதிப்புடன் ஒப்பிடும் போது இறப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது நிம்மதி தரும் விஷயமாக உள்ளது. இதுரை 1.22 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 1700 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புடன் ஒப்பிடும் போது இறப்பு எண்ணிக்கை குறைவு தான் என்றாலும் கூட அதனையும் தடுக்க தமிழக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இறப்பு விகிதம் 1.38% ஆக உள்ளது.
newstm.in