1. Home
  2. தமிழ்நாடு

சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா!

சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா!


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் அண்ணன் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சவுரவ் கங்குலியின் அண்ணன் சினேகாஷிஷ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக உள்ளார். சமீபத்தில் இவரது மனைவியின் பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பின்னர் சினேகாஷிஷ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டதில் சினேகாஷிஷ் கங்குலிக்கு தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. ஆனாலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல் அவர்கள் வீட்டில் பணி செய்யும் பெண்ணுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நான்கு பேரும் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சவுரவ் கங்குலியின் உறவினருக்கு கொரோனா!

newstm.in

Trending News

Latest News

You May Like