1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா!! ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு !!

தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் கொரோனா!! ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு !!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும் மருத்துவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கையில், தமிழகத்தில் ஒரே நாளில் மேலும் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 9,15,386 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,869 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,72,415 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,840 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அரசு மருத்துவமனையில் 11 ; தனியார் மருத்துவமனையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,520 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,59,320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,02,58,907 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 85,281 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 30,131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,52,545 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 2,593 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் இன்று யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Trending News

Latest News

You May Like