1. Home
  2. தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி !! தலைவர்கள் இரங்கல்...

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி !! தலைவர்கள் இரங்கல்...


கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் , கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டு , தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பலி !! தலைவர்கள் இரங்கல்...

அவருக்கு ஷண்முக சுந்தரி என்ற மனைவியும் , ஜீவா (13) என்ற மகனும் உள்ளனர். அவரது மனைவி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் ஆவடி திருமுல்லைவாயலில் வசித்து வருகிறார்கள்.

முதலில் தமிழன் டி.வி., பிறகு மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்த வேல்முருகன், பின்னர் ராஜ் டிவியில் இணைந்து கடந்த 10 ஆண்டுகளாக மூத்த ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like