1. Home
  2. தமிழ்நாடு

ராஜஸ்தானில் காங். ஆட்சியை காப்பாற்றிய பாஜக தலைவர்! பரபரப்பு குற்றச்சாட்டு!!

ராஜஸ்தானில் காங். ஆட்சியை காப்பாற்றிய பாஜக தலைவர்! பரபரப்பு குற்றச்சாட்டு!!


ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் காப்பாற்ற, பாஜகவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே உதவுகிறார் என்று பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஹனுமன் பெனிவால் குற்றம் சாட்டியுள்ளார். 

வசுந்தரா ராஜே தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏக்களை அழைத்து அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு கூறினார்,  சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு எம்.எல்.ஏவையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகியிருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார், இதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் முகாமை நாசப்படுத்த வசுந்தரா முயற்சிக்கிறார் எனவும்  ஹனுமன் பெனிவால் குற்றம்சாட்டுகிறார். 

இது தொடர்பாக டீவிட் ஒன்றை பதிவிட்டு அதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரை டேக் செய்துள்ளார். ஆனால் வசுந்தரா ராஜே எங்கள் மதிப்புமிக்க தலைவர் என்று பாஜக தலைவர் சதீஷ் புனியா கூறியுள்ளார்.  

newstm.in 

Trending News

Latest News

You May Like