1. Home
  2. தமிழ்நாடு

அடுத்த வாரம் முதல்வர் உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்ல போகிறார் - முக்கிய அப்டேட் கொடுத்த ராதாகிருஷ்ணன்..!

1

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் இந்த பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்கும். தற்போது தமிழகத்தில் ​​2.25 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன, 1.54 கோடி புதிய கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும், தை பொங்கலை முன்னிட்டு பரிசு பொருட்களை வழங்க தமிழக அரசு தயாராகி வருகிறது. இது குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்புகளுடன் 1000 ரூபாய் தொகையும் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகை மற்றும் பொருட்கள் கிடைக்குமா என்றும் அல்லது வேறு ஏதாவது கூடுதலாக கிடைக்குமா என்றும் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு என்னென்ன பரிசு பொருட்கள் கிடைக்கும், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அங்கு அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும் என்பது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பொங்கல் பரிசுகள் குறித்த செய்திகளை அடுத்த வாரம் முதல்வர் வெளியிடுவார் என்று தெரிவித்துள்ளார். கரும்பு கொள்முதல் தொடர்பாக வேளாண் துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக பொங்கல் பரிசில் என்ன என்ன பொருட்கள் இடம் பெரும் என்பதை முதல்வர் தான் அறிவிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் 35,000 ரேஷன் கடைகள் உள்ளன, அங்கு மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் உதவிகள் மக்களுக்கு சென்று சேருகிறதா என்பதையும் அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தையும் பின்பற்றி வருகிறோம். இந்த திட்டத்தின் மூலம், 1.14 கோடி பேர் பயன் பெறுகின்றன. 1.04 கோடி பேருக்கு இலவச அரிசி, ஒரு கிலோ பருப்பு  மற்றும் சர்க்கரை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like