கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடித்த சென்னை மாணவர்கள்! குவியும் வாழ்த்துகள்!
உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோயால் பலரும் உயிரிழந்து வரும் சூழலில் அதனை எதிர்கொள்வது சவாலாக உள்ளது.
இந்நிலையில் சென்னை ஐஐடிஉயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் சந்தீப் சேனாபதி தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் எய்ட்ஸை குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
எய்ட்ஸ் நோய் வைரஸ்கள் மருந்துகளை செயல்படாமல் செய்யக்கூடியவை. எனவே ஆராய்ச்சியாளர்கள் நோயின் பலவீனமான பகுதிகளின் மூலக்கூறு அமைப்பை ஆராய்ந்து, அதனை அழிக்கக் கூடிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு பல புதிய மருந்துகளை உருவாக்கக் கூடிய தரவுகளையும் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
newstm.in