சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் அறிவிப்பு..!
பொங்கல் பண்டிகை மட்டுமின்றி சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக செல்லும் பக்தர்கள் வசதிக்காகவும் இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கி விறுவிறுவென நடைபெற்று வருகிறது. ரயில் எண் 06151 கொண்ட சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) ஒருவழிப் பாதை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று (ஜனவரி 13) இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்படுகிறது.
நாளை பிற்பகல் 2 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இதில் ஏசி 3 டயர் பெட்டிகள் 2, ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் 2, ஜெனரல் செகண்ட் கிளாஸ் பெட்டிகள் 10, செகண்ட் கிளாஸ் பெட்டி 1, லக்கேஜ் & பிரேக் வேன் 1 ஆகிய பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
| ரயில் நிலையம் | நின்று செல்லும் நேரம் |
| சென்னை எழும்பூர் | 23.45 (திங்கள்) |
| தாம்பரம் | 00.35 |
| செங்கல்பட்டு | 01.05 |
| மேல்மருவத்தூர் | 01.30 |
| விழுப்புரம் | 02.35 |
| விருத்தாசலம் | 03.30 |
| அரியலூர் | 04.08 |
| ஸ்ரீரங்கம் | 04.38 |
| திருச்சி | 05.05 |
| திண்டுக்கல் | 06.10 |
| கொடைக்கானல் ரோடு | 06.35 |
| மதுரை | 07.30 |
| விருதுநகர் | 08.25 |
| சாத்தூர் | 08.45 |
| கோவில்பட்டி | 09.03 |
| திருநெல்வேலி | 10.03 |
| வள்ளியூர் | 10.55 |
| நாகர்கோவில் டவுன் | 11.30 |
| திருவனந்தபுரம் சென்ட்ரல் | 12.40 |
| திருவனந்தபுரம் வடக்கு (கொச்சுவேலி) | 14.00 (செவ்வாய்) |