1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 23-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வரும் 23 வரை தமிழ்நாடு கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், 25-ம் தேதி வரை தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Trending News

Latest News

You May Like