சரக்கு அடித்த குரங்கு !! குரங்குக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை !! விநோதச் சம்பவம்
குரங்குகள் சேட்டை செய்து பார்த்திருப்பீங்க , குட்டி கரணம் அடிச்சி பார்த்திருப்பீங்க. ஆனால் சரக்கு அடிச்சி பார்த்துருக்கீங்களா ? இதோ இந்த சம்பவமும் நடந்துள்ளதே. வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குரங்கின் பெயர் கலுவா.
தற்போது கலுவா குரங்குக்கு ஆறு வயது ஆகிறது. மிர்ஸாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த கலுவா, அப்பகுதியைச் சேர்ந்த 250 பேரைக் கடித்துள்ளது. இதில் ஒருவர் மரணம் அடைந்து விட்டார்.
மிர்ஸாபூர் மாவட்டத்தில், இந்த கலுவா குரங்கை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்துள்ளார். அவர் தினமும் இந்த குரங்குக்கு மதுபானம் கொடுத்து பழக்கியுள்ளார். திடீரென குரங்கை வளர்த்து வந்தவர் மரணம் அடைய, குரங்குக்கு மதுபானம் கிடைக்கவில்லை.
இதனால் மது வெறி கொண்டு , அப்பகுதியில் போவோர் வருவோரை எல்லாம் குரங்கு கடித்துக் குதறியது. மிர்ஸாபூர் மக்கள் இந்த குரங்கைப் பார்த்து பயப்படும் அளவுக்கு மோசமடைந்த நிலையில்,
வனத்துறையினர் விரைந்து வந்து கலுவாவைப் பிடித்தனர். கான்பூர் உயிரியல் பூங்காவில் குரங்கு அடைக்கப்பட்டது. முதலில் அதனை தனியாக ஒரு அறையில் வைத்துப் பராமரித்தோம். பிறகு அதை தனிக்கூண்டில் அடைத்தோம்.
எனினும் அதன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அது மிகுந்த வெறியோடு அலைகிறது. அது வனத்துறையால் பிடிபட்டு மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை அது மாறாததால், இனி வாழ்நாள் முழுக்க அதனை தனிக் கூண்டிலேயே அடைத்து வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்காவின் கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
Newstm.in