சாலையோரம் வீசப்பட்ட தோட்டாக்கள்.. கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீச்சு !
வீட்டில் புகுந்து கொள்ளையடித்த பொருட்களில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்ததால் கொள்ளையர்கள் பயந்து, அவற்றை வீசிவிட்டு தப்பிய சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.
மதுரை ஜீவா நகரில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்தப்போது உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அவரை தாக்கிவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்தனர்.
இது தொடர்பாக விஜய் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
இதனிடையே ஜீவா நகரில் உள்ள பட்டறை அருகே வீட்டு உபயோக பொருட்களுடன் தோட்டாக்கள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதேவேளையில் விஜய் என்பவர், தன்னை 2 இரண்டு பேர் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதாக புகாரளித்தார்.
அப்போது பட்டறையில் கிடந்த பொருட்கள் விஜய் வீட்டில் திருடப்பட்டவை என்றும் தோட்டாக்களைக் கண்ட கொள்ளையர்கள் அவற்றை வீசிச் சென்றதும் தெரியவந்தது.
தோட்டாக்கள் குறித்து விஜயிடம் கேட்ட போது, தனது தந்தையின் அனுமதி பெற்ற துப்பாக்கியை 7 ஆண்டுகளுக்கு முன் காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் ஆனால், தோட்டாக்கள் அவரிடத்திலேயே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து வீட்டில் உரிமையாளர் விஜய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் விசாரணை நடத்துகின்றனர்.
newstm.in