#BREAKING தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!
#BREAKING தமிழகத்தில் வேகமாக குறைந்துவரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் ஒரே நாளில் 3,536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,90,936 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. 3536 பேருக்கு மட்டுமே இன்று நோய் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னையின் பாதிப்பும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 885 பேர் மட்டுமே வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
ஒரே நாளில் 4515 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 6.42 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டங்களை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் 290 பேரும், சேலம் மாவட்டத்தில் 192 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 241 பேரும் ஒரே நாளில் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
newstm.in
Next Story