#Breaking News ; வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் !! தமிழக அரசு
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் எவ்வித தளர்வுகள் இன்றி முழு முடக்கம். ஜூலை 5,12,19,28 -ம் தேதி ஆகிய ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் இன்றி முழு முடக்கம் தொடரும்.
மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்ட அரசு - தனியார் பேருந்து போக்குவரத்துக்கு ஜூலை 15 வரை தடை. அந்தந்த மாவட்டத்துக்குள் இ பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி. திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது.
திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுக்கூடங்கள், பூங்காக்கள் செயல்பட தடை தொடரும். தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம்
Newstm.in