#BREAKING "ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி" : முதலமைச்சர்
தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வெளியாகும் செய்தி தவறானது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து வைத்தார். அதன்பின்னர் பேசிய அவர், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றும் அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வழிமுறைகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டுவது வேதனை அளிக்கிறது என்று முதலமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று வெளியாகும் செய்தி தவறானது என விளக்கம் அளித்தார்.
newstm.in