#BREAKING தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா!
தமிழகத்தில் ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1477ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளது. தஞ்சை புதிதகா 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது. கோவையில் 133 பேரும், திருப்பூரில் 108 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்று ஒரே நாளில் 46 பேர் குணமடைந்ததை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் நான்கு மருந்துவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் ஒரே நாளில் 24 பேர் குணமடைந்துள்ளனர்.
newstm.in