1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING கொரோனா : தமிழகத்தில் இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 30,271-ஆக உயர்வு !

#BREAKING கொரோனா : தமிழகத்தில் இன்று 1,630 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 30,271-ஆக உயர்வு !


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 30-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று 1,630 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,271 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் 41 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 666ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று 49 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன்படி இன்று ஒரேநாளில் 2,115 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதன் மூலம் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது 

newstm.in 

Trending News

Latest News

You May Like