#BREAKING: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து, இந்தியாவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மும்பையின் முக்கிய இடங்கள் மற்றும் தாஜ் ஓட்டல், அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து மும்பையில் தற்போது உச்சகட்ட பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in