1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

#BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!


ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் சனிக்கிழமை 21ம் தேதி ஒரு நாள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒரு திருவிழாவான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டு தோறும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி சனிக்கிழமை அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like