#BREAKING : இந்த 3 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு..!
தமிழகத்தில் பெரும் சேதாரத்தை ஃபெஞ்சல் புயல்,மழை ஏற்படுத்தி இருக்கிறது. கடலோர மற்றும் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் குடியிருப்புகள், உடமைகள் நீரில் மூழ்கியதால் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்கள் சேதம் அடைந்தன.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மட்டும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கபடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜனவரி 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடத்த செய்யப்பட்டுள்ளது.
எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச. 24 - ஜன. 01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிப்பு.