#BREAKING : மக்களே உஷார்..! சென்னைக்கு நாளை மஞ்சள் நிற எச்சரிக்கை..!

சென்னைக்கு நாளை மஞ்சள் நில எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை காலை 8.30 மணி வரையிலான காலகட்டத்தில் கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னையை தவிர, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய உள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் பள்ளிகளுக்கும்,விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (நவம்பர் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.